ஆன்மிகம்

ஆன்மிக செய்திகளை சுட சுட உங்களுக்கு தரும் ஒர் வலைத்தளம்

இறை வணக்கத்துக்கே உடல்

Flipkart.com
பருந்து ஆகாயத்தில் ஏழெட்டு மைல் உயரத்தில் பறக்கிறது. அதற்கு கூர்மையான கண்கள் உண்டு. அதனால், வெகு துõரத்தில் இருந்து இறந்த உடல்களைக் காண முடியும். கீழே கிடக்கும் ஒரு மாமிசத் துண்டை கண்டுபிடித்து உண்பதற்காக இந்த தகுதி அதற்கு வழங்கப்பட்டிருக் கிறது. அதுபோலவே நமக்கு உயர்ந்த கல்வித்தகுதிகள் இருக்கலாம். அதன் நோக்கம் என்ன? வேலைக்கு போக வேண் டும். சம்பாதிக்க வேண்டும் போன்ற புலன் இன்பத்திற்காக மட்டுமே. விண்வெளிக்கலன்களின் உதவியால் நாம் மிக உயரத்தில் பறக்கலாம். அதன் நோக்கம் என்ன? மனம் உள்ளிட்ட புலன்களின் திருப்திக்காக, சுயநலத்திற்காக.
ஆகவே, இந்த துயரமிக்க ஜடநிலைக்கு காரணமாயிருப்பது இந்த உடல் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதே சமயத்தில் இந்த உடல் நிலையானதல்ல என்பதையும் அறிய வேண்டும். "நான், என் உடல், குடும்பம், சமூகம், நாடு' மற்றும் பலவற்றோடு நம்மை நாம் இனங்கண்டாலும் எவ்வளவு காலத்துக்கு இவையெல்லாம் நிலைத்து நிற்கும். அவை சாஸ்வதமானவை அல்ல.
இந்த உடல் பயனற்றது என்றாலும், அதைப் புறக்கணித்தும் விடக்கூடாது. இறையுணர்வை செயல்படுத்த நம் ஜடஉடலைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு தேவையான வகையில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால், அதனிடம் பற்றுக்கொள்ளக்கூடாது. இதற்கு யுத்த வைராக்கியம் என்று பெயர். உடலை உதாசீனம் செய்யக்கூடாது. நாம் ஒழுங்காக குளித்து உணவுண்டு உறங்க வேண்டும்.
—சுவாமி பிரபுபாதா